மனித மூளை... (கல்முனையான்)
Wednesday, August 19, 2009
மரணித்துப்போன மனிதாபிமானத்தின்
மூத்த பிள்ளைதான் மூளை
இப்போது யாருமற்ற அநாதையாக
காடடுமிராண்டி கலாச்சாரத்திற்கு
முடிசூடா மன்னன்.
வெற்றிலையும் பாக்கும் சேர்ந்தால்தான்
சிவப்பு நிறம்...
மூளை சற்று தீவிரமாய் சிந்தித்தாலோ
உலகெங்கும் சிவப்பு நிறம்...
இது உறங்குவது நித்திரையில்தானாம்
வெறும் காய்ச்சி வடித்த பொய்
நித்திரையில் தானே பல பெண்களின்
கற்புகளும் உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றது.
சற்று சரியாக இது நடந்ததனால்
ஓரிரு இடங்களில்
பசுமைப் புரட்சி என்ற நாமத்தில்
கொஞ்சம் மனிதாபிமானக் குஞ்சுகளின் மறுபிறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment