என் ஏக்கம்.....

Monday, August 17, 2009

உன் புனிதத்தின் பிம்பங்களை உடைத்தெறியும்
என் மௌனம்
மிகப் புதிரானது.

என் மௌனங்களின் காற்புள்ளியில் தொக்கி நிற்கும்
உன் கேள்விகளுக்கு
என்னிடம் விடைகளோ தீர்வுகளோ இல்லை.

உன் வன்முறைகளின் மிச்சங்களிலிருந்துதான்
எனது மௌனம்
தனது தற்காப்பு ஆயுதங்களை
உருவாக்கிக் கொள்கிறது.

எனினும் என் மௌனம்
அதி வலிமையானது.

என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,
வலுவிழக்கும் உன் அதிகாரங்களையும்
விரியும் என் எல்லைகளையும்.
என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,

என் விடுதலையை.
உன் முயற்சிகளையும் மீறி
என் மௌனம்
சாத்தியப்படுத்தியிருக்கிறது

என்னை.

0 comments: