
கண்ணிலே கருணையும்
வாயிலே அன்பையும் கொண்டு
இதயத்தை பரிமாறவென்று
ஒரு கூட்டம் புறப்பட்டு விட்டது...
கவனமாய் இருங்கள்...
உங்கள் இதயத்தையும் வாடகைக்கு
வாங்குவதற்கு வரலாம்
சொல்லி அனுப்புங்கள் அவர்களை
இங்கே இதயம் இத்துப் போய்விட்டது என்று..
சில வேளை சிரிப்பார்கள் அவர்கள்
உங்களை நல்லவர் என்பார்கள்
நீங்கள் ஏழு கொலைகள் செய்திருந்தாலும்..
நம்பாதீர்கள் அவர்களை
உங்களை தின்று உணர்வுகளை துப்பி விடுவார்கள்.
உங்கள் இதய அறைகளில்
பன்னீர் நிறப்புவார்கள் முழுமையாக
ஆறேழு மாதங்களின் பின்
அவைகள் வற்றிவிடும் அந்த
முரண்பாடுகள் என்ற வெப்பத்தால்..
ஆதலினால் அனபானவர்களே
வேண்டாம் என்று சொல்லுங்கள்
உங்கள் இதயத்தை கொடுக்காதீர்கள்
கொடுத்து விட்டால் கெடுத்துவிடும்
உங்கள் மூளையை ஹா ஹா என்னைப்போல்..
0 comments:
Post a Comment