
மனிதனின் சோதனையின் உச்சக்கட்டம்
அவனுள் தோன்றும் வேதனை.
அவனையறியாமலே அவனுள்ளே
ஆட்கொள்ளப்படும் வெகுளித்தனம்
சற்று நிமிர்ந்தாலும் தலை வலி
காரணம் ஏதொ ஒரு வேதனை.. மனதளவில்
என் இரு கண்களும் ஏதோ இழந்த ஏக்கம்
இல்லை.. அது வேதனையின் தேக்கம்
என் காதுகள் கூட சரியாக கேட்பதில்லை
அவற்றின் திசுக்களில் கூட வேதனை போலும்
ஆமாம்,நேற்று என் காதில் எறும்பு ஒன்று
ஏதொ கூறியது மறந்துவிட்டது...
சற்று அண்ணார்ந்து பார்த்தேன்
வானத்தை அதிலும் ஒரு வேதனை
புரிந்தது எனக்கு தெளிவாக
வானில் இன்று நிலவு இல்லை அமாவாசையாம்....
1 comments:
Waw nice
Post a Comment