அதிகாலை வகுப்பினிலே (கல்முனையான்)

Friday, August 3, 2012

-அதிகாலை வகுப்பினிலே-

கருவறையில் இருக்கும் குழந்தை போல்
இருளறையில் உறங்குகிறது நான் கொடுத்த கணக்கு
திரிகோண கணிதமும் நூர்ந்த திரியான போது
கொழுத்திவிட கொழுந்துவிட்டது அதிகாலை வகுப்பு

வழமையாய் வந்த பதில்களில் வழுக்கி விழுந்து
நானும் மையொற்றுப் பேனாவில் மையல் கொண்டு
வெண்பலகையிலே கிசு கிசு பேசி முடிக்கும் வரை
கையிலே பேனையுடன் கனவு காணும் சகோதரங்கள்

சத்திர சிகிச்சைகளில் முத்திரை பதித்த கொப்பிகளும்
அதற்கு வைத்தியம் செய்யு கையிலே பேனையுடன்
அடிக்கடி தலை சொறிந்து யோசிப்பதாய் நடித்து
பின் முடித்து என்னிடம் காட்டும்போது அரைச்சாமம் முடிஞ்சிருக்கும்

முக்தி பெற்ற கணக்கொன்றை சித்தி பெற நாடி
சுத்தி நின்று தீர்க்கையிலே அடிக்கடி கத்திடுவேன் நானும்
புத்தி சொல்லி சக்தியெல்லாம் ஊதுபத்தியாகி
காற்றோடு ஆவியாகும் நானும் வகுப்புதனை முடிக்கையிலே..