சீதனம் (கல்முனையான்)

Friday, September 25, 2009



சீதனம்

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி

ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு

பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...

பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.

தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...

கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...

பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்

பரிதவிப்பு (கல்முனையான்)

Thursday, September 24, 2009



காமத்தின் ருசி அறியா காரிகையை
கல்யாணம் என்று சொல்லி அவசரமாய் மணமுடித்து
அஞ்சாறு நாளிலேயே அமெரிக்கா
போய்விட்டான் ஆறாத வடுவுடனே

அவனுக்கும் அவளுக்கும் இப்போது
தொலை பேசியில்தான் தாம்பத்யம்
காலை எழுந்தவுடன் உள் வீட்டு கூரை பார்த்து
ஏக்கத்துடன் பெரு மூச்சில் இவள்.

சாப்பிட மனமில்லை எதற்கு சமைக்க
அவள் உள் மனம் பேசுகிறது
சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டான் ஆசாமி
ரெண்டு வருஷம் காத்திருக்கணுமே...

வெளியிலே சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள் இம் மாது
இவளின் உணர்வுகளை எங்கோ சாக்குப்பையினுள்
ஒளித்துவிட்டு ஒட்டடை அடிக்கிறாள் வீட்டுக்கு..

பாவம் அவள் பரிதாபம் அவள் உணர்வுகள்
சந்தோசம்,அன்பு,பாசம் எல்லாமே
வெறும் நான்கு சுவருக்குள்ளே
நர்த்தனம் ஆடுகிறது நிர்வானத்துடன்...

கருகிய காதல்(கல்முனையான்)



என்னவளை நான் நினைத்த போது
என் கண்ணில் வெறும் கண்ணீர் வந்தது
அவள் என்னை மறந்த போது
எந்தன் நெஞ்சில் இரத்தம் காய்ந்து போனது...

வெறும் மாயையினுள் ஒளிந்திருக்கும் சூட்சுமம்
அதற்கு நாம் வைத்த பெயர் காதலாம்
காதல் தோல்வியுற்றால் அவனின் நரம்புகள் கூட
ஆர்ப்பாட்டம் செய்து வெளியேறுகின்றது உடம்பை விட்டு

காதல் வலியை போக்க அவன் உதட்டிலே
செந் தணலாய் வெள்ளைச்சாரனுடன் சிகரெட்
அதன் பின்னால் சென்ற வெள்ளை வாயு
அவனின் தொண்டையிலே ஒரு தாஜ்மகால் கட்டுகிறது

இவன் சிகரெட் வாங்கும் கடைக்காரன்
சிரிக்கிறான் இவனைப் பார்த்து இவன் அழகைப் பார்த்து
வேறொன்றுமில்லை இவன் வாங்கும் சிகரெட்டுக்கு
இன்னும் அனுமதி கிடைக்க வில்லை இவன் வீட்டில்

காதல் கடனாய் 1987 ரூபாய் இன்னும் இருக்கிறது இன்றுவரை
துணிந்துவிட்டான் இவன் இதயத்தை வட்டிக்கு விட
மாதா மாதமாய் சென்று வட்டி வாங்க
இவன் செல்வது எங்கு தெரியுமா???? காதலியின் வீதியிலே

இவன் எழுதிய காதல் கடிதங்கள்
இன்று அவள் பிள்ளையின் கழிவு துடைக்கும் கடதாசிகள்
இவன் அனுப்பிய குறுஞ்செய்திகள்
இன்று அவள் கணவனுக்கு அனுப்பும் அன்பு மொழிகள்

ஆனால்.... அவன் பேசிய வார்த்தைகள் மட்டும்
எங்கோ காற்றில் கலைந்து,கரைந்து
சங்கமமாகிறது இவன் இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்.....

கண்ணீர் (கல்முனையான்)

Monday, September 14, 2009



எனது இதயத்தின் இடுக்குகளிலே
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்

சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்

என் இதயத்தின் இரத்த குழாய்களில்
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று

பரவாயில்லை என் கண் மட்டும்
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்
நயாகரா நீர் வீழ்ச்சியாகிட்டே....