கருகிய காதல்(கல்முனையான்)

Thursday, September 24, 2009



என்னவளை நான் நினைத்த போது
என் கண்ணில் வெறும் கண்ணீர் வந்தது
அவள் என்னை மறந்த போது
எந்தன் நெஞ்சில் இரத்தம் காய்ந்து போனது...

வெறும் மாயையினுள் ஒளிந்திருக்கும் சூட்சுமம்
அதற்கு நாம் வைத்த பெயர் காதலாம்
காதல் தோல்வியுற்றால் அவனின் நரம்புகள் கூட
ஆர்ப்பாட்டம் செய்து வெளியேறுகின்றது உடம்பை விட்டு

காதல் வலியை போக்க அவன் உதட்டிலே
செந் தணலாய் வெள்ளைச்சாரனுடன் சிகரெட்
அதன் பின்னால் சென்ற வெள்ளை வாயு
அவனின் தொண்டையிலே ஒரு தாஜ்மகால் கட்டுகிறது

இவன் சிகரெட் வாங்கும் கடைக்காரன்
சிரிக்கிறான் இவனைப் பார்த்து இவன் அழகைப் பார்த்து
வேறொன்றுமில்லை இவன் வாங்கும் சிகரெட்டுக்கு
இன்னும் அனுமதி கிடைக்க வில்லை இவன் வீட்டில்

காதல் கடனாய் 1987 ரூபாய் இன்னும் இருக்கிறது இன்றுவரை
துணிந்துவிட்டான் இவன் இதயத்தை வட்டிக்கு விட
மாதா மாதமாய் சென்று வட்டி வாங்க
இவன் செல்வது எங்கு தெரியுமா???? காதலியின் வீதியிலே

இவன் எழுதிய காதல் கடிதங்கள்
இன்று அவள் பிள்ளையின் கழிவு துடைக்கும் கடதாசிகள்
இவன் அனுப்பிய குறுஞ்செய்திகள்
இன்று அவள் கணவனுக்கு அனுப்பும் அன்பு மொழிகள்

ஆனால்.... அவன் பேசிய வார்த்தைகள் மட்டும்
எங்கோ காற்றில் கலைந்து,கரைந்து
சங்கமமாகிறது இவன் இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்.....

2 comments:

Unknown said...

சூப்பரப்பு

fathima said...

Soooooper