என் தோழியின் அம்மா....(கல்முனையான்)

Monday, April 5, 2010


பத்து மாதம் என்னை சுமந்த என் அம்மா
ஏனோ என்னை பெற்ற ஒன்பதாம் மாதத்தில் ஒழிந்து கொண்டாய்
எப்படி அழுவது உனை நினைத்து நான்..
உன் புகைப்படம் பார்த்தேன் நானும்
அதில் என் இருப்பிடம் காணேனே என் அம்மா!!!

இருட்டில் இருந்த என்னை வெளிச்சத்தில் விட்டுவிட்டு
உச்சத்தில் இருந்து ஒய்யாரமாய் பார்க்கிறாய்
அம்மா உன்னைக் காண நான் கொடுத்து வைக்கவில்லை
அதனால் என்னையும் நீ காணவில்லை
பெருமிதம் அடைகிறேன் அம்மா நான் உன் பிள்ளையாய் ஆனதுக்கு!!!

ஏனம்மா என்னை விட்டு சென்றாய் தனியாக
உன் துணையாக நான் வந்திருப்பேனே அந்த அறியாத வயதினிலே
அன்று எத்தனை தடவை உன்னை அம்மா என்று அழைத்தேனோ தெரியாது
ஆனால் இன்று ஆயிரம் தடவை உச்சரிக்கிறேன் அம்மா அம்மா என்று
என் ஆசை தீர தீராது தாயே என் தாகம் உன் மீது கொண்ட பாசம்

அம்மா எனக்கு நீ வேண்டும் அம்மா மீண்டும் நீ வேண்டும் வருவாயா!
என் ஏக்கம் தீர்ப்பாயா தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து
அந்த இனிமையில் உறங்குகிறேன் உன் புடவைத்தலையணையினுள்
அம்மா என் உயிர் அம்மா இனிக்கிறது உன்னை உச்சரிக்க
அத்துடன் பனிக்கிறது என்ன கண் என்னை நச்சரிக்க.....