நம்பிக்கை

Monday, August 17, 2009

கண்ணிமைப்பொழுதின் காரிருள் சூழலில்
ஒளிப்பிழம்பாய் ஓர் தீற்றல்

மரணிக்கும் மனிதத்தின் மட்கிய எச்சத்தில்
விஞ்சி நிற்கும் ஒரு புள்ளியே
ஆயிரம் பகலவச்சுடராய்

சிதறுண்ட நீர்த்திவலைகளின்
ஒரு துளியே பெருஞ்சமுத்திரமாய்

எண்ணங்களின் அலைவரிசையில்
ஆர்ப்பரிக்கும் சிறு நினைவே
பெரும் ஒலியாய்
கனவுகளின் முடிச்சாய்

அலைக்கழிக்கும் சூறாவளியில்
கைக்கூட்டிடை ஒளிரும்
சுடர் விடும் அகலாய்

ஆழ்த்துளையில் பீறிட்டெழும் முதல் துளியாய்
வியாபித்திருக்கும் எங்கும்
சுழற்சியாய் நம்பிக்கை.

0 comments: