
காதலின் சறுக்கல்....
வெண்மையான உடலுக்குள்ளே
உண்மையை மறைத்து
ஆண்மையை ஏமாற்றும்
திறமை அது பெண்மை.
இனிக்க இனிக்க பேசி
பின் கண் சிவக்க சிவக்க அழுது
உன் நாசி வழியே நீர் வடிய
உன்னை அழ வைப்பதும் பெண்மை.
உந்தன் மனதினை மாற்றி
அதன் கோலத்தை குறைத்து பின்
இவ் அகிலத்தையே ஏமாற்றும்
ஒரு விச ஜந்து பெண்மை.
ஒரு தடவை மனிதனும் ஏமாந்தான்
இக் காதல் என்ற பெண்மையில்
அதனால்தான் வாழ்க்கைப் பாதையில்
சற்று சறுக்கி பின் எழுந்து விட்டான்.
சற்று உற்றுப்பாருங்கள் அவனை
தெரிகின்றதா காதல் வடு அவன் கண்ணில்
தெரியாது... அது தெரியாது....
அது கரைந்து போனது அவன் இதயத்தினுள்ளே..
யாரும் அழவேண்டாம் இனிமேல்
ஏன் தெரியுமா எமக்காகத்தானே
அந்த வானம் அழுகிறது அதோடு
அவனும் அழுகிறான்.
அழுது முடித்து விட்டான்
ஆனால் அவன் கண்கள் மட்டும்
அடம் பிடிக்கிறது இமை மூட
பரவாயில்லை பார்க்கலாம் நாளை..
மன்னியுங்கள்.. உங்களையும்
இந்த பெண்மையையும்
அழ வைத்ததற்கு
சென்று வருகிறேன் நான்....
0 comments:
Post a Comment