சந்தா்ப்ப பிராணிகள் (கல்முனையான்)

Wednesday, December 29, 2010


ஈர வலயத்து அட்டைகளின் மறு பிறப்பாய்
நன்மையை உறிஞ்சி விட்டு நாதியின்றி தவிர்க்கவிடும்
மனிதன் என்ற பெயரிலுள்ள இரண்டு கால்
பூச்சிகளாய் செத்தைகளில் பதுங்குகின்ற மானிடம்

பச்சை இரத்தத்தின் சிவப்பு நிறத்தினிலே காகிதப்
படகு விட்டு தோராட்டம் பார்க்கின்ற பாசாங்க
மனிதா்களின் ஈரமற்ற இதய இடுக்குகளின் ஓரத்திலே
இன்னும் இருக்கிறது சந்தர்ப்பவாதம் என்ற சாக்கடை வடிகான்கள்

சுவாசிக்கும் ஒட்சிசனின் ஓரப்பார்வையிலே ஒடுங்கி
நாசி நீரில் கால் கழுவி வெளியேறும் காபனீரொட்சைட்டிலே
ஈரத் தலையை வீரத்தோடு உலா்த்தி எட்டிப் பார்க்கும்
எட்டப்பக் கூட்டத்தின் ஏழாம் சாமத்து சாத்தான்கள்

எண்ணெய் வடியும் தலையினிலே மண்னை அள்ளி
மலர்க் கோலம் போடும் மானம் கெட்ட மங்கையரின்
அற்கஹோல் பார்வைக்காய் அரை வயிறு சாப்பிட்டு
அலைகின்ற ஆந்தைக் கூட்டத்தி்ன் முகவரிகள்

தார்போட்ட றோட்டினிலே யார் வீட்டில் குழப்பம் என்று
தூர் போட்டு மேய்கின்ற வெள்ளாட்டுக் கூட்டத்தில்
தள்ளாத வயதினிலும் துள்ளாத கால்கலுடன்
தூங்காமல் விழித்திருக்கும் பெருசுகளின் விழிகள்



0 comments: