உழுத்துப் போன சமுதாயத்தில் புழுத்துப்போன வட்டிதனை
கொழுத்திப்போட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே..
ஆதனத்தை சீதனமாக்கி பின் வேதனமாக்கும் போதனையை
சேதனம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
கலாச்சாரத்தை சிரச்சேதம் செய்யும் அபச்சாரமான விபச்சாரத்தை
சூரசம்ஹாரம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
வறுமைதனை வாழ்வின் உரிமையாக்கிய ஏழைகளின் கண்ணீரை
அருமையாக அழித்திட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
சிந்தையின்றி போர் விந்தை புரியும் மூளையற்ற மந்தைகளை
கந்தையாக்க புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
சேற்றுக்குள் நாற்று நட்டு சோற்றுக்காய் ஏங்குகின்ற ஏழையின்
வயிற்றுக்காய் புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment