பிரசவம் - (கல்முனையான்)

Monday, November 2, 2009

தாயின் கருவறையில் சிறைப்பட்டு
சிசுவாக நாளறியாத பிணையிலே
உலகிற்கு வந்துவிட்டேன்.

என்ன அது.. எல்லோரும் நடக்கின்றனர்
எனக்கும் இருக்கிறதே கால்கள்.
முடியவில்லையே.

ஓ.இன்னும் வருடங்கள்
செல்லவேண்டுமாம் அந்தக் கிழவி
பக்கத்து பெண்ணிடம் சொன்னாள்.

இரண்டு வருடத்தின் பின்
அங்காங்கே என் பாதங்கள் பட்டு
பூமியில் சில காயங்கள்.

0 comments: