நடக்கமுடியாத நதிகள்

Sunday, January 22, 2012

பெண்ணாய்ப் பிறந்ததனால் புண்ணாய்ப் போனவர்கள் நாங்கள்
சுரண்டிவிட்ட சொரணையிலே கரண்டியிட்டு ருசி பார்க்கப்படுபவர்கள்
அமாவாசை இருட்டினிலும் அம்மா ஆசை மறந்தவர்கள்

புண்ணிய பூமியிலே கண்ணியமாய் பிறந்திருந்தும்
இன்னும் அந்நியமாய் அலைபாயும் ஆதாமின் தோட்டத்தின்
அழகான ஆப்பிள்க் கனிகள் நாங்கள்

முக்தி பெற்ற யமுனையிலும் சக்தி பெற்ற கங்கையிலும்
சளைக்காமல் பெண்மையின் மணம் வீசும் போது
இன்னும் அடுப்படியில் அரங்கேறும் அக்கிரமங்கள்.

கடலைக் கலக்கிவிட்டு எங்கள் கர்ப்பத்தில் புகுத்திவிட்டு
அர்ப்பமாய் தூரத்தில் நின்று பெண்ணியம் பேசுகின்ற
பேதைகளின் போதைப் பேச்சினிலே புதைந்து விட்டோம்

நதியாக நாமிருந்து வாழ்க்கைப் படகினை ஓடவிட்டும்
அதோ!..கதியாக நடுவினிலே நாமிருக்க
நடக்க முடியாத நொண்டிகளாய்  ஊர்ந்து செல்கிறோம் ஊர் ஊராய்...


0 comments: